டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி- பிரகாஷ் ஜவடேகர்

.The Union Minister for Environment, Forest & Climate Change, Information & Broadcasting and Heavy Industries and Public Enterprise, Shri Prakash Javadekar holding a press conference on Cabinet Decisions, in New Delhi on October 21, 2020.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும்பணி 2021ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும். தடுப்பூசி போடுவது குறித்து ராகுல் கவலைப்பட்டால், முதலில் அவர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு தடுப்பூசி செலுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது. மே 1ம் தேதி துவங்கிய 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அவர்கள் இன்னும் துவக்கவில்லை.

ராகுலின் அறிக்கையை பார்க்கும் போது, பிரதமருக்கு எதிராக அவதூறு பரப்ப டூல்கிட்டை காங்கிரஸ் உருவாக்கியது உறுதியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.