வீட்டுக்கு ஒருவர் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் – பஞ்சாப் !

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.மேலும் அரசு மற்றும் விவசாயிகளின் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.இது மட்டும் இல்லாமல் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியும் வன்முறையில் முடிந்தது.

ஆனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை.இந்நிலையில் , டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு பஞ்சாப் கிராமத்தில் வீட்டிற்கு ஒருவர் கண்டிப்பாக செல்ல வேண்டுமென கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் விர்க் குர்த் என்ற கிராமத்தில்தான் தற்போது இந்த ஆணையானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர் ஒருவார காலம் டெல்லி போராட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற செய்தி தெரியவந்துள்ளது.