திரிணாமுல் கட்சியிலிருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல் !

mamata
பாஜக ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது

மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தல்,திரிணாமுல் கட்சி மற்றும் பாஜக இடையிலான கடும் போட்டியால் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தற்போது , வங்க மொழி நடிகையும், அரசியல்வாதியுமான தேபாஸ்ரீ ராய், திரிணாமுல் கட்சி சார்பாக தெற்கு 24 பர்கானாஸில் உள்ள ரைடிஹி தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கும் நிலையில், வரவிருக்கும் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

மேலும் பல திரிணாமுல் கட்சித் தலைவர்களையும் தொண்டர்களையும் பாஜக தன்பக்கம் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.