முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்..!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சியில் நாளை மதியம் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார்.

கடைசியாக, கடந்த ஜனவரி மாதம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.