1 முதல் 9 வகுப்பு வரை தேர்வின்றி தேர்வு அறிவிப்பு – புதுவை !

புதுச்சேரியில் கரோனா பாதிப்புகளை முன்னிட்டு 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுகின்றனர் என புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

எனினும், இம்மாத இறுதி வாரத்தில் ஒரு நாள் மனஅழுத்த விடுவிப்புக்கான ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31ம் தேதி வரை 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் நடைபெறும். அதன்பின்னர் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்படும். 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் பொது தேர்வு நடைபெறும் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.