ஆந்திரா உள்ளாட்சித் தேர்தலில் ஜெகன் மோகனுக்கு வெற்றி !

ஆந்திராவில் 12 மாநகராட்சிகள், 75 நகராட்சிகளுக்கு கடந்த 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.75 நகராட்சிகளில் 73 நகராட்சிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரிகள், பாஜக ஆகிய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை.தடிபத்ரி, மைதுகூரு ஆகிய நகராட்சிகளில் மட்டும் தெலுங்குதேசம் கட்சி வென்றுள்ளது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியானது 671 வார்டுகளில் 425 வார்டுகளை கைப்பற்றியது.