இந்திய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் !

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணாவை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி சரத் அரவிந்த் போப்டே இந்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். தற்போது இப்பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரமணா ஏப்ரல் 24 ம் தேதி பதவியேற்பார்.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நீதிபதி ரமணா 1983 ஆம் ஆண்டில் சட்டப்படிப்பைத் தொடங்கினார்.