மே 2ஆம் தேதி தேர்தல் கொண்டாட்டத்துக்குத் தடை !

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது கடுமையான விதிகளைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்குத் தேர்தல் முடிந்து வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் தேர்தல் கொண்டாட்டங்கள் நடத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.மேலும் வெற்றி பெற்ற அரசியல் கட்சியின் வேட்பாளர் அதிகாரியிடம் வெற்றிச் சான்றிதழைப் பெறும்போது, வேட்பாளருடன் 2 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.