கிரிக்கெட் வீரர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி !

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் அவரது காயத்தை ஆய்வு செய்த பிசிசிஐ மருத்துவக் குழுவினர், அவருக்கு முழங்காலில் சிறிய அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். அதன்படி இன்று அவருக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடராஜன், இன்று எனக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

என்னைக் கனிவுடன் கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவினர், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள்,அனைவருக்கும் நன்றி. பிசிசிஐ அமைப்புக்கும், நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.