துருக்கி நாட்டை தாக்கும் கரோனா தொற்று !

துருக்கியில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,67,281 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப்ரல் 29ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை துருக்கியில் முழு பொதுமுடக்கம் இருக்கும் என்றும், நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைப்பதே தற்போதைய இலக்கு என்றும் துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.