அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன – புதுச்சேரி !

நாடு முழுவதும் கரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழலில் அதனை தடுக்க தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவற்றை தாண்டி வேறு வழியின்றி பொதுமுடக்கத்தையும் மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

புதுச்சேரி மாநிலத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியில் இரண்டு நாட்கள் பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, மருந்தகம், பால், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் மதுக்கடைகளை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூட அம்மாநில கலால்துறை துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.