இயக்குநர் தாமிரா கரோனாவால் காலமானார் !

கரோனா தொற்று தமிழக்தில் அதிகம் பரவி வருகிறது.பிரபலங்கள் மத்தியிலும் தொற்று அதிகமாக உள்ளது.அவர்களில் சிலர் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

தற்போது ,பிரபல இயக்குநர் தாமிரா கரோனா தொற்றால் காலமானார்.இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா ஆகியோவை வைத்து ரெட்டச்சுழி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

2 018 வெளியான ஆண் தேவதை என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குநர் தாமிரா அசோக் பில்லர் அருகே உள்ள மாயா மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.