நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது !

தமிழ் சினிமாவில் சிம்பு முன்னணி நடிகருள் ஒருவர்.சிம்புவிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின்போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் இடையில் பிரச்சனை உருவானது.

மேலும் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்திருந்தது.

தற்போது இதற்கு தீர்வு கிடைத்துள்ளது.சிம்புவுக்கு விதித்திருந்த ரெட் கார்டைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சிம்பு தர வேண்டிய பணத்திற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உத்திரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.