தி பேமிலி மேன் சீரிஸ் குறித்து மனம் திறந்த சமந்தா !

தென்னிந்திய நடிகைகளுள் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா.தமிழ்,தெலுங்குஆகிய இரு மொழிகளிலும் ஹிட் ஹீரோயினாக இருந்து வருகிறார்.

தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிசில் ஈழ தமிழ் பெண் கேரக்டரில் நடித்ததற்காக சமந்தாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.மேலும் இந்த வேடத்தில் நடித்ததால் அவருக்கு நிறைய எதிர்ப்பும் வந்தது.

தற்போது இந்த சீரிஸ் குறித்து மனம் திறந்துள்ளார்.இந்த கதாபாத்திரம் மூலம் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

தி பேமிலி மேன் வெப் சீரிஸ் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் வெளியானது.இதில் ஈழத் தமிழர்களைத் தீவிரவாதிகளாகச் காட்சிப்படுத்தியதில் பல புகார்கள் எழுந்தன.

நான் அதில் ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்ததாக அவர்கள் எண்ணினால் உங்கள் மனதை புண்படுத்தியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.மேலும் தனது கதாபாத்திரம் மோசமாக சித்தரிக்கப்பட்டது என்று சிலர் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.