இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு இல்லை யுஜிசி அறிவிப்பு !

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

தற்போது,கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மத்தியப் பல்கலைக்கழங்களில் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

மேலும் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். அக்டோபர் 1-ம் தேதி முதல் கல்வியாண்டு தொடங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,2022-23ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை மத்திய பல்கலைக்கழங்களில் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடக்கவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.