கொரோனா தொற்றின் பரவலை தடுக்க உலக நாடுகள் போராடிவருகின்றன.தற்போது ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதில் சிக்கி ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.
ஜெர்மனியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.இதனால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தெற்கு ஜெர்மனி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வெள்ளம் காரணமாக இதுவரை 156 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் ஏஞ்சலா மெர்கல் சென்று பார்வையிட்டுள்ளார். மீட்புப் பணிகள் விரைவாக நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.