தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமலில் வைத்துள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.தமிழகத்தில் இன்று 1,971 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,37,373. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,36,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் 147 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.இன்று தொற்றினால் 28 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.