கொரோனா தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் தொடங்கியது!!!

Omicron sub-variants
புதிய ஒமைக்ரான் துணை வகைகள் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 17 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. சென்னை, நீலகிரி, நெல்லை, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெறுகிறது.

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் நெல்லக்கோட்டை ஆரம்ப சுகாதார மையம், நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவமனை, சமாதானபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார மையத்திலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நெமம் ஆரம்ப சுகாதார மையம், திருமழிசை ஆரம்ப சுகாதார மையம், கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் நிறுவனம், சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்.எல்.எம். ஹோம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், பூலுவாப்பட்டி ஆரம்ப சுகாதார மையம் என 17 மையங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை தமிழகத்தில் முதலாவதாக சென்னையில் தொடங்கியது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 47 ஆயிரத்து 500 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 21 ஆயிரத்து 170 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசியை போட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படும்.