‘கங்கையின் மகள்’ கங்கை ஆற்றில் மிதக்கும் மரப்பெட்டியில் பச்சிளம் குழந்தை !

உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் கங்கா நதியில் புதன்கிழமை மர பெட்டியில் 21 நாள் பெண் குழந்தை மிதந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டு ஆஷா ஜோதி கேந்திர அனாதை இல்லத்திற்கு அனுப்பிவைத்தனர்.

காசிப்பூர் காவல் நிலையத்தின் கீழ் வரும் தாத்ரி காட் அருகே ஆற்றில் குழந்தை மிதந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அருகில் படகில் இருந்தவர்கள் அந்த பெட்டி அருகே சென்றனர் அந்த பெட்டியில் ஒரு குழந்தை சிவப்பு துணியால் மூடப்பட்டிருந்தது மேலும் அதை சுற்றி தெய்வங்களின் புகைப்பட பிரேம்கள் இருந்தன.

டாக்டர்கள் பரிசோதித்தபின் குழந்தை மிகவும் ஆரோக்கியமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியிலுள்ள உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் பிறப்பு ஜாதகமும்  பெட்டியின் உள்ளே காணப்பட்டது.இதனை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.மேலும் அந்த குழந்தைக்கு கங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.