மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது பெண் ஒருவர் ஆண் நண்பருடன் சந்தேகப்படும் படியாக அங்குள்ள அறைக்கு சென்றதை கண்டனர். பின்னர் அந்த அறைக்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர்.
அங்கு இருந்தது நடிகை நடிகை நைய்ரா ஷா மற்றும் அவர் காதலன்.அங்கு நடந்த சோதனை முடிவில் நடிகை நைய்ரா ஷா என்பவர் சிகரெட்டில் போதைப்பொருளை வைத்து புகைத்தது கண்டறியப்பட்டது.
இதனால் நைய்ரா ஷா மற்றும் அவரது காதலரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதனை தொடர்ந்து இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, நைரா ஷா மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.