புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை -புதுச்சேரி !

புதுச்சேரியில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கமாக நடைபெறும் கடற்கரை சாலையில் நடத்தாமல் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்த் துறை தலைவருடன் ஆலோசித்து பின்னர் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது “புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரையில் மக்கள் அதிக அளவில் கூடுவது வழக்கம். ஆனால், தற்போது கரோனா வைரஸ் பரவிவருவதால், அதனை இம்முறை அனுமதிக்க முடியாது. அதிக அளவில் மக்கள் மகிழ்ச்சியில் கூடும் வேளையில் மத்திய அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது கடினம் என்றார்.