இடைக்காலத் தடை – சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்கு !

மதுரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய்கள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். அதனை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பொது நல வழக்கு ஒன்றினைத் தாக்கல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார்.

அதில்,பலர் முந்திரி தோலில் தயாரித்த எண்ணெயை சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்கின்றனர்.பேக்கிங் செய்து தான் விற்பனை செய்ய வேண்டும். கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட வேண்டும். அதனை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனை செய்வதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.