கும்பகோணம் தனி மாவட்டம் ஆக்கப்படும் – ஸ்டாலின் பேச்சு !

தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில்,அணைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு பலத்த போட்டி நிலவுகிறது.

திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசுகையில்,கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் கும்பகோணம் பகுதி வளர்ச்சி பெறும் என்று கூறினார்.