புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப் படி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ‘கோவிட்-19’ நோயை உண்டாக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், அந்த வகை வைரஸின் பரவலை தடுக்க, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த நபர்களை கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது என அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். புதிய வகை பற்றிய கூடுதல் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.