இந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையில் நடந்த துப்பாக்கி சண்டை – சத்தீஸ்கர் !

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள் 15 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த மோதலில் துணை ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது . மேலும் 3 0க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்தார் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தின் போது வீர மரணம் அடைந்த 5 ராணுவ வீரர்களில் இரண்டு பேர் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்