அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது !

அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அதன் தலைநகரான இட்டாநகரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 415 இன் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவம் தலைநகர் இட்டாநகரின் மையப்பகுதியில் உள்ள டி-செக்டரில் இந்திரா காந்தி பூங்கா அருகே நடந்துள்ளது.இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

இந்த நெடுஞ்சாலையானது 59 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.அஸ்ஸாமில் இருக்கும் கோபூரில் இந்த நெடுஞ்சாலை முடிவடைகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.இந்த நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.