எரிபொருள் விலை உயர்வு: ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். பிரதமர் மோடி உ.பி., மாநிலம் வாரணாசி சென்று ரூ. 1,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.

பின்னர் இன்று மாலை (ஜூலை 15) டில்லி ராஷ்டிரபதி பவன் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். வரும் 19-ம் தேதி பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி ,எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.