நாகினி சீரியல் ஹீரோ கைது

சீரியல் மூலம் தன்னுடைய திரை பயணத்தை துவங்கியவர் பேர்ல் வி.பூரி. இந்த சீரியலை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்தாலும், இவரது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகப்படுத்தியது என்றால் ‘நாகினி 3 ‘ சீரியல் தான். இதில் ஹீரோவாக நடித்து மிகவும் பிரபலமானார். இவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பேர்ல் வி.பூரி, கடந்த 2019ம் ஆண்டு மும்பை அருகில் உள்ள வசாயில் என்கிற பகுதியில் டிவி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தன்னுடைய 5 வயது குழந்தையையும் படப்பிடிப்புக்கு கூட்டி வந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சுற்றி சுற்றி அனைவரிடமும் விளையாடி கொண்டிருந்த அந்த குழந்தையை நடிகை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அந்த பிஞ்சு குழந்தையை விளையாட அழைத்து செல்வதாக, பேர்ல் வி பூரி தனியாக அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அதை அந்த நடிகை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த குழந்தைக்கு மறு தினமே உடல்நல பிரச்சனைகள் ஏற்படவே, குழந்தையின் தந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது, பாலியல் தொல்லைக்கு ஆளான விவரம் தெரிய வந்தது.