தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கருப்பு புஞ்சை

தமிழகத்தில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வரக்கூடிய சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர், கருப்பு புஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வட மாநிலங்களில் மட்டுமே அதிகமாகக் கண்டறியபட்ட கருப்பு பூஞ்சை தொற்று தற்போது தமிழகத்திலும் கண்டறியப்படுவதால் சிகிச்சைக்கான மருந்தின் தேவை அதிகரித்துள்ளது.


இந்த நோயை குணப்படுத்த ஆம்போடெரிசின் – பி என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் சார்பில் தற்போது வரை தமிழக அரசுக்கு 2,470 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

ஜூன் இரண்டாம் தேதி நிலவரப்படி கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 518 ஆக இருந்த நிலையில், தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.