வணிக முறையில் அதிக பால் கொடுக்கும் எருமை கன்று உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அரியானாவின் கர்னல் நகரில் தேசிய பால்பண்ணை ஆய்வு மையம் அமைந்துள்ளது இங்கு தொழில் முறையில் செயற்கையாக விலங்குகளை உருவாக்கும் பணியில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன்படி குளோனிங் தொழில் நுட்ப உதவியுடன் இந்த மையம் எருமை கன்று ஒன்றை உருவாக்கி உள்ளது அதற்கு தேஜஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
நாட்டு எருமை பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவியாக இந்த உருவாக்கம் இருக்கும் இதனால் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் என அந்த மையத்தின் இயக்குனர் மன்மோகன் சிங் சவுகான் கூறியுள்ளார்.
இந்த தேஜஸ் என்ற புதிய எருமையானது அதிக பால் கொடுக்கும் முர்ரா இனத்தில் இருந்து உருவாக்கப்பட்டது கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் 16 எருமைகள் உருவாக்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.