தமிழக கரோனா பொதுநிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் வழங்கிய விஜய் வசந்த் !

தமிழகத்தில் கரோனா பாதிப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் நிறுவனங்கள் நிதியளித்து வருகின்றன.

தற்போது நடிகரும் குமரி எம்பியுமான விஜய் வசந்த், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கரோனா பொது நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சம் நிதியை வழங்கினார்.