திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி வாழ்த்து !

உலகப்பொதுமறையாக திகழும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பிறந்த தினம் இன்று.தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

இந்தநிலையில் இன்று திருவள்ளுவர் தினத்துக்கு மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன்.

அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன. அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.