மாயம் காட்டும் மாறா, தேடி அலையும் பாரு – மாறா திரைப்படம் !

நம் அனைவர்க்கும் வாழ்விலும் அதிசயம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம்.அப்படி நினைப்போர் மாறா திரைப்படத்தை ஒரு தடவை பாருங்கள் ஒரு மாயா உலகிற்கு போகலாம்.

மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படமான 2015 ஆம் ஆண்டு சார்லி படத்தின் தமிழ் ரீமேக்தான் மாறா.அமேசான் தளத்தில் வெளியான இப்படத்தில் மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் திலிப் குமார் இயக்கியுள்ளார்.

நாயகி ஷ்ரதா வீட்டிலிருந்து புறப்பட்டு தான் செய்யும் பணிக்காக கேரளாவிற்கு செல்கிறார். அங்கு அவர் தங்கும் இடத்தில், சிறுவயதில் கேட்ட கதைகள் ஓவியமாக இருப்பதை பார்க்கிறார். மேலும் மாதவன் வீட்டில் தங்கும் நிலை அவர்க்கு அமைகிறது.அங்கிருந்து மாறவின் உலகத்திற்கு செல்கிறார். பிறகு மாதவனை தேட துவங்குகிறார்.

மாதவன் சம்பந்தப்பட்ட ஆட்களை சந்தித்து பேசி , அதன் மூலமாகவே மாதவன் மீது காதலும் கொள்கிறார். இப்படி ஷ்ரதாவின் தேடுதல் படலம் தொடர, அவர் மாதவனை சந்தித்தாரா, அவர்கள் காதல் என்னவானது.? என்பதே மாறா படத்தின் மீதி கதை.