அடுத்த கொரோனா நிவாரண நிதி எப்போது?

வரும் ஜூன் 3ஆம் தேதிக்குள், அடுத்த தவணை, 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 34,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஊரடங்கால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை விட சிறிய மாநிலங்களில் கூட, நாளொன்றுக்கு, கொரோனா தொற்று, 50 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது.