கொரோனா நோயாளிகளுக்கு உதவும் நீடா அம்பானி

ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் வயதுவந்தவர்களுக்கான சிகிச்சை பெட்களை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீடா அம்பானி, ‘கொரோனா பாதிப்பால் ஆழ்ந்த வலி, இழப்பு மற்றும் வேதனையில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் மக்கள் பற்றி எங்கள் மனம் சிந்திக்கிறது. கொரோனா பாதிப்புச் சூழலில் இந்தியாவுக்கு எங்களால் என்னென்ன செய்யமுடியுமோ அதனை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.

கொரோனா பாதிக்கும் சூழலைக் கருத்திக்கொண்டு இளம்பருவத்தினர் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு சிகிச்சைக்கான வசதிகளை அதிகரித்துவருகிறோம். ரிலையன்ஸ் அறக்கட்டளை தொடர்ந்து படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றை தொடர்ந்து வழங்கும். நாம் இணைந்து இந்த சவலான சூழலிருந்து மீண்டு வருவோம்’ என்று தெரிவித்துள்ளார்.