விரைவில் வருகிறது மாதாந்திர மின் கணக்கீடு !

தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியது,கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 150 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடைபெறுகிறது என்றும், வெறும் 6 வார்டுகளில் மட்டும் நடைபெற்ற மக்கள் சபை கூட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன.

இந்த மனுக்களில் அதிகம் வருவது உதவித்தொகை பெற கோரிக்கை வருகிறது.

மேலும் திமுக தெரிவித்தது போல் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது ,மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டு திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மின்சாரத் துறையில் உள்ள 50 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

இதையும் படிங்க : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !