தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் செப் 12 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,மற்ற வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம். கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக மயிலாடுதுறை, காஞ்சிபுரம், கொடைக்கானல் ஆகிய மாவட்டங்களிலும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !