எம்ஜிஆர் ஆட்சியை முதல்வர்யால் மட்டுமே தர முடியும்!!

அமைச்சர் பாண்டியராஜன், ”அதிமுக அரசின் கஜானா காலியாகி விட்டது என்று திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கூறினார்கள். ஆனால் இப்போது 5000 கோடி ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் வலிமைப்படுத்தப்பட்ட அரசாக உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு பணம் கொடுப்பது ஏன் என்று சொல்லும் எதிர்க்கட்சிகள் கொரோனா காலத்தில் 5000 கொடுங்கள் என்று கூறினார்கள். தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற எண்ணம் இந்த கட்சிகளுக்கு வந்து விட்டது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க அரசு பணம் தருகிறது. கொள்ளை அடித்த பணத்தில் திமுகவும் கட்சி ரீதியாக மக்களுக்கு பணம் கொடுக்கலாம் என்று அறிவிக்கலாம்” என்றார்.

மேலும் எம்ஜிஆர் ஆட்சியை முதல்வர் பழனிசாமி மட்டுமே தர முடியும் சிலர் தலைவரின் வாரிசு என்று கூறுவது எதற்கும் ஒவ்வாத விஷயம், இயக்கத்தின் ஆன்மா எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும்தான் என்றார்.