வாஜ்பாய் குறித்த புத்தகம் வெளியீடு

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட ‘தி இயர்ஸ் தட் சேன்ஜ்டு இந்தியா’ என்ற புத்தகம் அவரது நினைவு நாளன்று (டிச.25) வெளியிடப்படுகிறது.

1998இல் இந்திய அரசாங்கத்தை கட்டியெழுப்பி அதை நடத்தும்போது வாஜ்பாய் சந்தித்த இன்னல்கள் குறித்து இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக எழுத்தாளர் ஷக்தி சின்ஹா தெரிவித்தார்.

300க்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதப்பட்ட இப்புத்தகம் 10 அத்தியாயங்களைக் கொண்டது. தற்போது இதன் பிரதிகளுக்கு ஆன்லைனில் முன்கூட்டியே ஆர்டர் தொடங்கப்பட்டுள்ளது.