ஒரு மீனவர் சட்டப்பேரவைக்கு செல்வார்- கமல்

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் கூடிய அரசியலை முன்னெடுப்போம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தரமற்ற முறையில் கட்டப்படும் வடிகாலால் கழிவுநீர் தேங்கும் பகுதியாக மாறிவிடும் எனவும் எச்சரித்தார். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் கூடிய அரசியலை முன்னெடுப்போம் எனக் கூறிய அவர், கடற்கரையோர பகுதி மக்களின் குறைகளை களைய சட்டப்பேரவையில் தங்களது கட்சி சார்பில் மீனவ பிரதிநிதி ஒருவர் இருப்பார் என்றும் உறுதியளித்தார்.