கரோனா சிகிச்சை முடிந்து அமைச்சர் காமராஜ் வீடு திரும்பினார் !

கரோனா தொற்று காரணமாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் காரணமாக கடந்த ஜனவரி 5ஆம் தேதி சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூச்சுத்திணறல் அதிகம் காணப்பட்டதால் 20ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மீண்டும் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவர் உடல் நலமடைந்த அமைச்சர் காமராஜ் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.இது அவருக்கு மறுபிறவி என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.