சசிகலா அதிமுக கொடி பயன்படுத்தியதால் அமைச்சர்கள் புகார் !

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்பு கடந்த ஜனவரி 27 ம் தேதி தண்டனை முடிந்து விடுதலையானார்.மேலும் அவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதால் பெங்களூரு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்பு உடல்நிலை நலமான இருந்து சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.அப்போது அவர் புறப்படும் போது அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் பயணம் செய்தார்.இதற்கு அதிமுக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பாக சசிகலா மீது டிஜிபி அலுவலகத்தில் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார் சி.வி சண்முகம் ஆகியோர் இன்று நேரில் சென்று புகார் அளித்தனர்.மேலும் சசிகலா தமிழகம் வரும்போது தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.