நன்மைகள் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி !

மாப்பிள்ளை சம்பா அரிசி நமது பாரம்பரியத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது பார்க்க சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் இருக்கும் சத்துக்கள் என்னவென்றால் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து ,இரும்புச்சத்து போன்றவை.. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்க கூடியது.

மாப்பிள்ளை சம்பா அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.

மேலும் இது ஆண்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கவும் உடல் பலம் கொடுக்கவும் வேண்டிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு.இந்த அரிசியை நீங்கள் உங்க உணவில் சேர்க்கும் போது உடலில் இருக்கும் கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது.

இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.