கல்லூரிகள் திறக்கும் நாள் அறிவிப்பு -அண்ணா பல்கலைக்கழகம் !

கரோனா தொற்று காரணமாக அணைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன.தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் படம் நடத்தப்படுகிறது.இந்நிலையில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழுவதும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழக அரசு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.இதையடுத்து பிப்ரவரி 8 முதல் பள்ளி கல்லூரிகள் முழுமையாக திறக்கலாம் என்று அரசு அறிவித்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை என அனைத்து வகுப்புகளும் 8 ஆம் தேதி முதல் தொடங்கும். இதற்கான அட்டவணையும் பல்கலைக்கழகம் வெளியிட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8 ஆம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15 ஆம் தேதியும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.