பிலிப்பைன்ஸில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது !

பிலிப்பைன்ஸ் நாட்டின் சுலு மாகாணத்தில் சி -130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது.இந்த விமானத்தில் ஏறக்குறைய 100 ராணுவ வீரர்கள் இருந்ததாக தெரிகிறது.

இந்த விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.விமானம் விபத்துக்குள்ளாகி வெடிப்பதற்கு முன்பு விமானத்தில் இருந்து தரையில் குதித்துள்ளனர்.

இது நாட்டின் மிக மோசமான இராணுவ விமான விபத்துக்களில் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் காணாமல் போன 17 பேரை மீட்பு படையினர் தேடிவருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.