முத்தூட் குழுமத்தின் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் காலமானார் !

இந்தியாவின் பெரிய நிதி நிறுவனம் ஆன முத்தூட் குழுமத்தின் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் வெள்ளிக்கிழமை மாலை டெல்லியில் காலமானார்.அவரின் வயது 71.

அவரது தலைமையின் கீழ், தி முத்தூட் குழுமத்தின் முதன்மை நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட், NBFC களில் இந்தியாவின் மிகப்பெரிய தங்க நிதி நிறுவனமாக மாறியது. அவரது தலைமையின் கீழ் தான் முத்தூட் குழு உலகம் முழுவதும் 5,500 க்கும் மேற்பட்ட கிளைகளுக்கும் 20 க்கும் மேற்பட்ட பல்வேறு வணிகங்களுக்கும் விரிவடைந்தது.

முத்தூர் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக 1979-ல் பணியில் சேர்ந்தார். பின்னர் 1993-ல் நிர்வாக இயக்குனராக உயர்ந்தார்.2020 ஆம் ஆண்டில், ஜார்ஜ் முத்தூட் 26 வது பணக்கார இந்தியராகவும், இந்தியாவின் பணக்கார மலையாளியாகவும் ஃபோர்ப்ஸ் ஆசியா பத்திரிகை அறிவித்தது.