பாஜகவில் இணைந்தார் திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் – நெருக்கடியில் மம்தா !

mamata
பாஜக ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் திரிவேதி இன்று முறைப்படி பாஜகவில் சேர்ந்தார். பாஜகவின் தலைவர் ஜே பி நட்டா முன்னிலையிலும், மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் முன்னிலையிலும் அவர் கட்சியில் இணைந்தார்.

திரிவேதியை ஒரு கொள்கை ரீதியான அரசியல்வாதி என்று பாராட்டிய ஜே.பி.நட்டா, முன்பு தவறான கட்சியில் இருந்த சரியான நபர், இப்போது சரியான கட்சியில் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் கட்சிக்குள் மம்தாவின் அண்ணன் மகனின் ஆதிக்கம், பிரஷாந்த் கிஷோரின் கட்டுப்பாட்டில் மம்தா சென்றது போன்ற பல விஷயங்களில் திரிணாமுல் தலைவர்கள் அதிருப்தி தருவதாக கூறப்படுகிறது.