மம்தாவின் தீவிர பிரச்சாரம் !

mamata
பாஜக ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் மிக விரைவில் நடக்கவுள்ளது.இந்நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

மேற்கு வங்கத்தில் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பாஜக முடிவாக உள்ளது.இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜியை சில நபர்களால் தாக்குதலுக்கு உட்பட்டார் .

இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.தற்போது,காயம் அடைந்த காலுடன் வீல் சேரில் அமர்ந்தபடி பிரசாரத்தை மீண்டும் தொடங்கினார். அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது.

வாழ்க்கையில் நான் பல தாக்குதல்களை எதிர்கொண்டேன், ஆனால் ஒருபோதும் தலை வணங்கவில்லை என்று மம்தா பானர்ஜி ஆவேமாக பேசினார்.