தாக்கப்பட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி !

mamata
பாஜக ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது

மேற்கு வங்கம் மாநிலத்திற்கு மார்ச் இறுதியில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.வேட்புமனு தாக்கல் செய்ய அவர் சென்ற போது 4 அல்லது 5 பேர் அவரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜியிடம் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என கேட்கப்பட்டது.இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். என்னை சுற்றி போலீஸாரே இல்லை.காலில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.