மக்கள் பள்ளி பற்றி நாளை முக்கிய அறிவிப்பு !

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது நவம்பர் 1 ம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் கற்பிக்கும் மக்கள் பள்ளி என்ற திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,மக்கள் பள்ளி திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் நாளை வெளியிடு வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு !